மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 October, 2021 7:33 AM IST
Warning : Fraud Alert

மேலுார் கோமதியாபுரம் கோவிந்தன் 54. ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருக்கு ஸ்டேட் வங்கியில் இருந்து 'அப்டேட்' செய்வது போன்ற ஒரு SMS வந்தது. அதை 'கிளிக்' செய்து, கேட்ட வங்கி விபரங்களை தெரிவித்த நிலையில் 3 முறை OTP எண் கேட்டது.

அப்டேட் SMS

அதையும் அவர் 'டைப்' செய்து அனுப்ப, வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டது. கடந்த மாதம் மதுரை பழங்காநத்தத்தில் நாராயணன் என்பவரிடம் வங்கி அதிகாரி போல் பேசி OTP நம்பர் பெற்று ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்தனர். மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியில் ஒரு பெண்ணிடம் வங்கி விபரங்களை பெற்று பணத்தை எடுத்தவர்கள், பிரதமரின் நிவாரண நிதிக்காக எடுத்ததாக SMS அனுப்பினர்.

விழிப்புணர்வு

மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் தொடர்ந்து பணத்தை இழந்து தவிக்கின்றனர். சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் அதுகுறித்த தகவலை 24 மணி நேரமும் இயங்கும் 155260 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு (Cyber Crime Help Line) தெரிவிக்கலாம். உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து கணக்கு எண் முடக்கப்பட்டு பணம் பாதுகாக்கப்படும். இழந்த பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கி மேலாளர் பேசுவது போல் யார் பேசினாலும் நம்ப வேண்டாம். வங்கி விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS வந்தாலோ அதை பொருட்படுத்த வேண்டாம். நேரில் சென்று வங்கி விபரங்களை தெரிவிப்பது நல்லது. இவ்வாறு கூறினார்.மதுரை, அக்டோபர் 1, மதுரையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் பணம் சுருட்டுவது தொடர்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

மேலும் படிக்க

ஆன்ட்ராய்டு போன்களை குறி வைத்து தாக்கும் புது வைரஸ்

உங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி?

English Summary: Warning: Risk of Snatching via SMS: Stay tuned!
Published on: 01 October 2021, 09:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now