மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 December, 2021 9:01 PM IST
West Bengal woman distrbutes food

சகோதரனின் திருமணத்தில் எஞ்சிய உணவு ஏழைகளுக்கு விநியோகம் செய்து சமூக வலைதள மனங்களை வென்றுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த நாட்களில் திருமண சீசன் முழு வீச்சில் உள்ளது மற்றும் சமூக ஊடகங்கள் (Social Medias) தங்கள் சிறப்பு நாளில் போஸ் கொடுக்கும் ஜோடிகளால் நிரம்பியுள்ளன.

எவ்வாறாயினும், திருமண விழாக்களின் கோலாகல கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஒரு பெண் எஞ்சிய திருமண உணவை ஆதரவற்றவர்களுக்கு விநியோகிக்கும் செய்யும் புகைப்படம் உதவும் நல்லெண்ணத்திற்காக வைரலாகி வருகிறது.

ஏழைகளுக்கு உணவு (Food for Poors)

மேற்கு வங்கத்தின் ரனாகாட் ஸ்டேஷனில், கோலாகலமான திருமண வரவேற்புக்கிடையில் ஒருவரின் செய்கை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. திருமண அலங்காரத்தில் ஆடை அணிந்த ஒரு பெண், நள்ளிரவு 1 மணிக்கு வரவேற்பு விருந்தில் இருந்து ஏழைகளுக்கு உணவை (Food) விநியோகிப்பதை அங்கு வந்திருந்த நிலாஞ்சன் மோண்டல் என்ற திருமண புகைப்படக் கலைஞரையும் ஈர்த்தது.

போட்டோகிராபி (Photography)

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வயதான பெண்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை, ரிக்ஷா வாலாக்கள் மற்றும் பலர், அறுசுவை உணவைப் பரிமாற அப்பெண்ணின் அருகில் கூடுவதைக் காண முடிகிறது.

அந்தப் பெண் உலோக வாளிகள் மற்றும் உணவு நிரப்பப்பட்ட பெரிய கொள்கலன்களிலிருந்து உணவை எடுத்து காகிதத் தட்டுக்களில் ஏழைகளுக்கு அவரே பரிமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் போட்டோகிராபரால் கிளிக் செய்யப்பட்டார். மோண்டல் அந்தப் பெண்ணின் பெயர் 'பாபியா கர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் தனது சகோதரரின் திருமண வரவேற்பு என்றும், ஒரு பெரிய அளவு உணவு மிச்சம் ஏற்பட்டதால் அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அதை வழங்குவதை பாபியா கர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டதாகவும் நிலாஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

உலக மண் தினம்: மண்வளம் காக்க உறுதி எடுப்போம்!

உடல் நலம் ரொம்ப முக்கியம்: வந்தாச்சு கொரோனா பால்!

English Summary: West Bengal woman distributes leftover food at wedding to the poor!
Published on: 05 December 2021, 09:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now