மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 September, 2022 7:40 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள  நிலுவைத் தொகை விரைவில் ஒரே செட்டில்மெண்ட்டாக வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொரோனா சமயத்தில் இந்த அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அகவிலைப்படி இரண்டு முறை உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்த உயர்வுக்கு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களின் மற்றுமொரு எதிர்பார்ப்பு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதே.

வதந்தி

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது கிடைக்கும் என்பது தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில் அது வழங்கப்படாது எனவும் ஒருபுறம் வதந்தி பரவியது.

பரிசீலனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை அகவிலைப்படி நிலுவை உள்ளது. இதை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், வருகிற நவம்பர் மாதத்தில் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான செட்டில்மெண்ட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

பண்டிகைக்காலம்

பொதுவாகவே, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நாட்டு மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி சமயத்தில் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பை எதிர்நோக்கி 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

English Summary: When will be the 18 month DA balance available?
Published on: 27 September 2022, 07:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now