Others

Sunday, 26 March 2023 08:03 AM , by: R. Balakrishnan

DA Hike for Tamilnadu Govt Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்வு தற்போது 38 சதவீதத்திலிருந்து 4% உயர்த்தப்பட்டு, 42 சதவீதமாக மாறியுள்ளது. அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று முன்தேதியிட்டு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசை பின்பற்றி ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3 முறை தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் காலம் தாழ்த்தி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த முறை காலம் தாழ்த்தாமல் ஜனவரி 1ம் தேதி அன்று முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

இவர்களுக்கு மட்டும் இனி அதிக பென்சன் கிடைக்கும்: மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)