மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 April, 2022 11:26 AM IST
Where did the yellow bag project go again

சொல்வதை செய்வோம்; செய்வதை சொல்வோம்! முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அடிக்கடி வரும் வார்த்தை, இது. கோவையில் எங்கெங்கு காணினும் கோலோச்சும் பாலித்தீன் பைகள், நீரோடைகளையும், சாக்கடைகளையும் அடைத்துக் கொண்டு அசுரத்தனமாக ஆதிக்கம் செலுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளையும் பார்த்தால், தமிழக அரசும், மாநகராட்சியும் சொல்வதும், செய்வதும் என்னவென்பது ஊருக்கே விளங்கும்.

மீண்டும் மஞ்சப்பை என விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் செலவிடும் தமிழக அரசு, முதலில் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் கைகளில் அவற்றைத் திணிக்க வேண்டும். ஏனெனில், கோவை நகரில் பூக்கடை, பழக்கடை, மளிகைக்கடை, கறிக்கடை, ஓட்டல், மெஸ், காய்கறிக்கடை, சாலையோரக் கடை என மக்கள் அதிகமாகப் புழங்கும் கடைகளில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை தாராளமாகப் புழங்குவதைப் பார்த்தால், மஞ்சப்பை திட்டமே மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

பிளாஸ்டிக் (Plastic)

'யார் பறிப்பது' என்று சொல்லாமல் சொல்வதைப் போல, சாலையோரக் கடைகளில், பாலித்தீன் பைகளில் பூக்களைக் கட்டி தோரணமாகக் தொங்க விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீதியிலும், மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

நொய்யல் ஆற்றிலும், அவற்றின் நீரோடைகளிலும், சங்கனுார் பள்ளத்திலும் நீரோடும் பாதை அனைத்திலும் வண்ண வண்ணமாய் எண்ணற்ற பிளாஸ்டிக் பாட்டில்களும், பைகளும் அணை கட்டி நிற்பதைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதை, கடமைக்காக கூட, மாநகராட்சி அதிகாரிகள் செய்வதே இல்லை.

கோவை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமே பிளாஸ்டிக் ஆதிக்கம் தொடர்கிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை ஓரளவுக்காவது ஒழிக்க முடியும்.

மஞ்சப்பை (Yellow Bag)

மக்கள் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மெனக்கெட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சியோ, இங்குள்ள சூழல் அமைப்புகளோ அதற்காக ஒரு துரும்பையும் அசைப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய அதிகாரிகளால், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் வெற்றிபெறாது என்பதே உண்மை.

மேலும் படிக்க

வாழை நாரில் புதிய தொழில்: முந்திரிப் பழத்தில் ஊட்டச்சத்து பானம்!

டாடா மோட்டார்ஸின் அதிரடி சாதனை: ஒரே நாளில் இத்தனை கார்களா?

English Summary: Where did the yellow bag project go again: Plastic dominance continues!
Published on: 30 April 2022, 11:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now