மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 November, 2021 3:14 PM IST
With 90% government subsidy Earn Rs. 2 lakhs!

இப்போது நீங்கள் பார்க்கப்போவது ஒரு சூப்பர்ஹிட் வணிகத்திற்கான யோசனை ஆகும். இதைத் தொடங்குவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆம்.. ஆடு வளர்ப்புத் தொழிலைப் பற்றி பேசுகிறோம். ஆடு வளர்ப்பு வணிகத் திட்டம் மிகவும் இலாபகரமான வணிகமாகும், மேலும் இந்தியாவில் மக்கள் ஆடு வளர்ப்புத் தொழிலில் இருந்து பெரிய தொகையை சம்பாதிக்கிறார்கள்.

வீட்டிலிருந்தே இந்தத் தொழிலைத் தொடங்கலாம். தற்போது இது ஒரு பெரிய வணிகமாகக் கருதப்படுகிறது, இது ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் உடம்பிற்கான ஊட்டச்சத்து அளிப்பது வரை நிறைய பங்களிக்கிறது. ஆட்டுப் பண்ணை கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். ஆடு வளர்ப்பில் பால், உரம் போன்ற பல நன்மைகள் உள்ளன.

அரசு 90 சதவீதம் வரை மானியம் வழங்கும்

இந்தத் தொழிலைத் தொடங்குவது மிகவும் எளிதானது. அரசு உதவியோடு இதைத் தொடங்கலாம். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், சுயதொழிலை மேற்கொள்ளவும், ஹரியானா அரசு கால்நடை உரிமையாளர்களுக்கு 90 சதவீதம் வரை மானியம் வழங்கி வருகிறது. அதே சமயம் மற்ற மாநில அரசுகளும் மானியம் தருகின்றன. கால்நடை வளர்ப்பில் இந்திய அரசு 35% வரை மானியம் வழங்குகிறது.

ஆடு வளர்ப்பு தொடங்க பணம் இல்லாவிட்டாலும் வங்கிகளில் கடன் வாங்கலாம். ஆடு வளர்ப்புக்கு கடன் வழங்க நபார்டு வங்கி உள்ளது.

எவ்வளவு செலவாகும் என்பது தெரியும்

இதைத் தொடங்க இடம், தீவனம், நன்னீர், தொழிலாளர்களின் எண்ணிக்கை, கால்நடை உதவி, சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி பற்றிய தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இந்த வணிகத்தை பொறுத்தவரை ஆட்டுப் பால் முதல் இறைச்சி வரை பெரிய வருமானம் கிடைக்கும் என்று சொல்லலாம். சந்தையில் ஆட்டுப்பாலுக்கு அதிக தேவை உள்ளது. அதே நேரத்தில், அதன் இறைச்சியின் உள்நாட்டு தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இது ஒரு புதிய வணிகம் அல்ல, இந்த செயல்முறை பழங்காலத்திலிருந்தே நடந்து வருகிறது.

நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஆடு வளர்ப்பு திட்டம் மிகவும் லாபகரமான வணிகமாகும். ஒரு அறிக்கையின்படி, 18 ஆடுகளின் மூலம் சராசரியாக ரூ. 2,16,000 வருமானம் ஈட்ட முடியும். அதே நேரத்தில், ஆண் ஆடுகள் மூலம் சராசரியாக ரூ.1,98,000 சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க:

ஆடு வளர்ப்பைத் தொடங்க இந்த மொபைல் செயலி! இனம் மற்றும் திட்டங்களைப் போன்ற தகவல்.

English Summary: With 90% government subsidy Earn Rs. 2 lakhs!
Published on: 12 November 2021, 03:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now