News

Friday, 04 July 2025 08:33 AM , by: Harishanker R P

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த ஜூன் 3-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் வடக்கு கோடை மேழலகியான் கால்வாய் வழியாக மன்னார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட 4 குளங்களுக்கு வந்தடைகிறது.

இந்நிலையில், மேழலகியான் கால்வாயைத் தூர்வார நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்களது சொந்த செலவில் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கால்வாய் தூர்வாரப்படாமல் விட்டதால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)