சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 September, 2021 8:58 AM IST
Entry in the electric vehicle industry: Apple Car is coming to brighten the roads

பிரபல ஐபோன் நிறுவனமான ஆப்பிள், ஒரு மின்சார காரைத் வடிவமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

2030க்குப் பிறகு இந்தியச் சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனால், பல்வேறு நிறுவனங்களும், குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ் அல்லாத நிறுவனங்களும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.

ஆப்பிள் கார் (Apple Car)

அந்த வகையில் நாம் பார்க்கவிருப்பது பிரபல ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் புதிய கார்தான்.குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், மற்ற எந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்தின் உதவியுமின்றி, ஒரு மின்சார வாகனத்தை உருகவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், தற்போது இறுதி பாகங்கள் சப்ளையர்களைத் தேர்வு செய்து வருகிறது. முன்னதாக, BMW, ஹூண்டாய், நிசான் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, மின்சார வாகன தயாரிப்பில் கூட்டு சேர்ந்து பணிபுரிவது குறித்து ஆராய்ந்தது.
ஆப்பிள் இப்போது, தகவல் கோரிக்கை (RFI), முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) மற்றும் கொடேஷன் கோரிக்கை (RFQ) ஆகியவற்றை உலகளாவிய ஆட்டோமொபைல் பாக உற்பத்தியாளர்களுக்கு அனுப்பும் செயல்முறையை முடித்துவிட்டது.

ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் வாகன உற்பத்தி, ஸ்டீயரிங், டைனமிக்ஸ், சாப்ட்வேர் மற்றும் பணித்திட்ட மேலாண்மை ஆகியவற்றில் பெரிய உற்பத்தி அனுபவம் கொண்ட இரண்டு பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியது.

இந்த பொறியாளர்கள் இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு திட்டக் குழுவில் தயாரிப்பு வடிவமைப்பு பொறியாளர்களாக பணிபுரிகின்றனர்.
நம்பகமான ஆப்பிள் ஆய்வாளரான மிங்-சி குவோ, முன்பு, ஆப்பிள் காரின் அறிமுகம் 2025-2027 வரை நடக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மின்சார காரின் அறிமுகம் 2028 ஆண்டு, அல்லது அதையும் தாண்டிச் சென்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆப்பிளின் மின்சார கார் திட்டத்தின் தற்போதைய தலைவர் டக் ஃபீல்ட், ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஃபோர்டுக்கு செல்கிறார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க...

இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!

வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!

English Summary: Entry in the electric vehicle industry: Apple Car is coming to brighten the roads
Published on: 12 September 2021, 08:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now