மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2020 8:49 PM IST
Credit : Job fair HSPAA

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் (Job Fair) பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம், என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் டிசம்பர் 19, 20 தேதிகளில், உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் (GVG College) நடக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்:

வேலைவாய்ப்பு முகாமில், தனியார் துறையில் (Private) வேலையளிப்பவர்கள் பங்கேற்று, பயன்தாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (Employment Registration) மற்றும் சுயதகவல் (Resume) படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு, தேவையான காலியிடங்களை நிரப்ப, தங்கள் வருகையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய:

எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். பதிவு செய்ய, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்.

தொழில் முனைவோருக்கான ஆலோசனை

குறிப்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, வெளிநாட்டு வேலை பெறுதவற்கான பதிவு, தொழில் முனைவோருக்கான ஆலோசனை (Advice for Entrepreneurs) மற்றும் வங்கிக்கடன் வழிகாட்டுதல் ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு:

0421-2971152, 9499055944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!

English Summary: Invitation to the youth to participate in the employment camp! Advice for Entrepreneurs!
Published on: 16 December 2020, 08:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now