மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 September, 2021 2:14 PM IST
Yoga Grandmother

சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் (Nanammal) குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். 

யோகா பாட்டி

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுக் கொண்டார்.

சுமார் 90 ஆண்டுகளாக அவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் பலரும் யோகாசனம் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் என்னும் பொருள்படும் நாரிசக்தி விருது மற்றும் 2017ம் ஆண்டில் யோகா ரத்னா விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மா யோகா பாட்டி என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்தது.

இந்நிலையில், வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தனது 99-ம் வயதில் கோவையில் உயிரிழந்தார். இவர், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளித்து வருகிறார்கள்.

விருதுகள்

  • 2016ல், மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதைப் பெற்றார்.
  • 2018ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

கடந்த 2019ல் நாணம்மாள் பாட்டி காலமானார். பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதால், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

யார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்!

முதியவர்கள் கீழே விழுவதை தவிர்க்க சில ஆலோசனைகள்!

English Summary: Recognition for Tamil Nadu Yoga Grandmother in CBSE Course!
Published on: 29 September 2021, 02:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now