Blogs

Sunday, 10 April 2022 03:53 PM , by: Elavarse Sivakumar

உங்களால் தினமும் 4 ரூபாய் முதலீடு செய்ய முடிந்தால், பெருந்தொகையைக் குறிப்பிட்ட காலத்தில் உங்களால் வருமானமாகப் பார்க்க முடியும்.
அந்தவகையில், எல்ஐசி திட்டத்தில், தினமும் 4ரூபாய் முதலீடு செய்தால் போதும், 4 லட்சம் ரூபாய் வருமானம் பெறலாம். LICயில் இடம்பெற்றுள்ள இந்தத் திட்டம் பெணக்ளுக்கு சூப்பர் பலன்களைத் தருகிறது.


இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), பாதுபாப்பான முதலீடு மட்டுமின்றி பாலிசிதாரர்களுக்கு முதிர்ச்சி காலத்தை நிரந்தர வருமானத்தை அளிக்கிறது. இந்தியர்களுக்குப் பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு பிரபலமான விருப்பமாக எல்ஐசி திட்டங்கள் திகழ்கின்றன.

எல்ஐசி செயல்படுத்தி வரும் திட்டங்களில் எல்ஐசிஆதார் ஷீலா திட்டமும் ஒன்று. இது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உத்தரவாத திட்டமாகும். இந்த திட்டத்தில் தினமும் 29 ரூபாய் முதலீடு செய்துவந்தால், நிச்சயத்தொகையாக ரூ4 லட்சத்தை பெற முடியும்.

எவ்வளவு முதலீடு

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 75 ஆயிரம் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை ஒருவரால் இந்த எல்.சி. ஆதார் ஷீலா திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச மெச்சூரிட்டி காலம் 10 ஆண்டுகள். அதிகபட்சமாக ஒருவர் 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். ஒருவர் ப்ரீமியத்தை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்.

உதாரணமாக, நீங்கள் தினமும் ரூ29 செலுத்தி வந்தால், ஆண்டிற்கு மொத்தமாக 10 ஆயிரத்து 959 ரூபாய் முதலீடு தொகையாக செலுத்தியுள்ளனர். இதே பிராசஸை, 20 ஆண்டுகளுக்கு தொடர்கீறிர்கள் என வைத்துகொள்வோம். அதன்படி, 30 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடர்ந்தால், தினமும் 4 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், மொத்த முதலீட்டு தொகை ரூ2 லட்சத்து 14 ஆயிரத்து 696 ஆகும். ஆனால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் கிடைத்திடும்.

இந்த திட்டத்தில் 8 முதல் 55 வயதுள்ள பெண்களால் முதலீடு செய்ய இயலும்.
எல்ஐசியின் இணையதளத்தின்படி, இந்த திட்டம் சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு எந்த மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை

கடன் வசதி

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கடன் வாங்கலாம். முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் 2 வருடங்களுக்குள் காலாவதியான பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம்.

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் பிரிவு 80 சி கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதிர்வு தொகை பிரிவு 10 (10D) இன் கீழ் வரி இல்லாதது.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)