மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 March, 2023 4:58 PM IST
Unemployed Youth

வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் நல்ல செய்தி வந்துள்ளது. இதுவரை வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் வேலையில்லா உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் பூபேஷ் பாகேல் அரசு இதனை அறிவித்துள்ளது. இந்த திட்டம் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

உதவித்தொகை

சத்தீஸ்கர் மாநிலத்தின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஏப்ரல் 1 முதல் மாதந்தோறும் 2500 ரூபாய் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வேலையற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 2500 செலுத்தப்படும்.

இதனுடன், வேலையில்லாதவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவன், மனைவி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்கிய குடும்பத்துக்கு இது பொருந்தும். வேலையின்மை உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பதாரர் சத்தீஸ்கரை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதியின் படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி அதாவது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், விண்ணப்பதாரர் சத்தீஸ்கரின் ஏதேனும் ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு அரசு தரப்பிலிருந்து இந்த நிதியுதவி கிடைக்கும். இதுபோன்ற வேலையின்மை உதவித் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் இப்படியொரு திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!

English Summary: Rs.2,500 per month for unemployed youth: State government's wonderful scheme!
Published on: 30 March 2023, 04:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now