மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2020 4:39 PM IST

தமிழகத்தில் வேளாண் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் காய்கறி உற்பத்தியை பெருக்கி, தன்னிறைவு அடைவதே ஆகும்.    

கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.  இதனால் பெரும்பாலான காய்கறிகள், பழங்கள் போன்றவை விற்பனை செய்ய இயலாமல் தேங்கும் நிலை உருவானது. தமிழகத்தை பொருத்தவரை அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தடை உத்தரவை அடுத்து உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழங்களை நம்பி இருக்கும் நிலை உருவானது.

தோட்டக்கலை துறை முயற்சி

தமிழகத்தில் குறைந்த அளவிலான பரப்பளவில் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி ஆவதால் அதனை உயர்த்தும் நோக்கில் தேசிய வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலக்கு நிர்ணயக்க பட்டுள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்களிலும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இதை பயன்படுத்தி, வாய்ப்புள்ள விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட வேண்டும் என வேளான் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி மற்றும் தோட்டக்கலை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இதன்படி விவசாயிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெண்டை, கத்திரி, பச்சை மிளகாய, அவரை உள்ளிட்ட காய்கறி விதைகள் வழங்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.

Daisy Rose Mary

Krishi Jagran

https://tamil.krishijagran.com/blogs/state-government-nurseries-going-to-increase-seedling-tray-for-upcoming-shortfall/

English Summary: State Agricuture and Horticulture Department Distributes Vegetable Seeds To Overcome Scarcity
Published on: 23 May 2020, 04:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now