மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 September, 2021 9:32 AM IST
celebrate the birth of a baby girl

மத்திய பிரதேசத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட விரும்பிய வியாபாரி, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரியை மக்களுக்கு இலவசமாக வழங்கினார். மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா, வயது 28.

இலவச பானி பூரி

பானி பூரி வியாபாரியான இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதை கொண்டாடும் வகையில் போபாலின் கோலார் பகுதியில் தற்காலிகமாக மூன்று பானி பூரி கடைகளை அமைத்தார். 'பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை அனைவருக்கும் இலவச பானி பூரி வழங்கப்படும்' என, அறிவித்தார். இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் அப்பகுதியில் மக்கள் திரண்டனர். 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரியை அஞ்சல் குப்தா இலவசமாக வழங்கினார்.

Also Read | தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை

இது குறித்து அவர் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சிலர் பெண் குழந்தையை வளர்க்க அதிக செலவு ஏற்படும் என்றனர். எதிர்காலத்தில் திருமணம் உள்ளிட்டவற்றுக்காக அதிக பணம் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படும் என எச்சரித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன். பெண் குழந்தை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும், தாங்கள் அதிர்ஷ்டசாலி என பெருமைப்பட வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்லவே இதுபோல வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டேன்.

மேலும் படிக்க

போலீசாருக்கு 8 மணி நேர வேலை: ஐகோர்ட் உத்தரவு!

பெண் விவசாயி வாங்கிய வங்கிக்கடனை அடைத்த நீதிபதி!

English Summary: The father who gave Bani Puri for free to celebrate the birth of a baby girl!
Published on: 14 September 2021, 09:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now