1. செய்திகள்

போலீசாருக்கு 8 மணி நேர வேலை: ஐகோர்ட் உத்தரவு!

R. Balakrishnan
R. Balakrishnan
8 hours work for police

தமிழக போலீசாரின் குறைகளை களைய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட வேண்டும், போலீசாருக்கு 8 மணி நேர பணி முறையை விரைவில் பின்பற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

8 மணி நேர வேலை

போலீசார் பணிச்சுமை தொடர்பாக மாசிலாமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் (ஓய்வு) ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு;

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போலீசார் , மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது. இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது.

3 மாதத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த குழுவில் மன நல நிபுணர்கள், உளவியலாளர் , சமூக ஆர்வலர், போலீசார், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும்.

போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

3 ஷிப்டுகளில் போலீசாரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

கூடுதல் ஊதியம்

  • போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கிட அரசு பரிசீலிக்க வேண்டும்.
  • போலீஸ் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்,
    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க

மதுரையில் மழைப்பொழிவு குறையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை பசுமை பரப்பை அதிகரிக்க 800 இடங்கள் தேர்வு!

English Summary: 8 hours work for police: High Court order! Published on: 11 September 2021, 07:58 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.