மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2022 8:58 AM IST
Credit: Samayam Tamil

சிறைவளாகம் என்பது செய்தத் தவறை உணர்ந்து, நம்மைத் திருத்திக் கொள்வதற்கான இடம்.

இந்த இடத்தில் இருந்துதான், பல தலைவர்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டதுடன், உன்னதச் சிந்தனைகளை உலகுக்கு வழங்கினர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சிறை என்பது, சமூக விரோதக் கும்பல்களுக்கு தாய் வீடாக இருப்பதுதடன், அங்கும் பல அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன.

விதிமீறல்கள் (Irregularities)

குறிப்பாக சிறையில் சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம், பீடி, செல்போன் பயன்பாடு உள்ளிட்டவை அதிகரித்திருப்பதாகப் புகார்கள் வந்தால், உடனடியாக அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு திஹார் சிறையில் நடத் ரெய்டிற்கு பயந்து கைதி ஒருவர், செல்போனை விழுங்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

திகார் சிறை (Tihar Jail)

இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறையாகவும், மிக மோசமான சிறையாகவும் வருணிக்கப்படுவது, டெல்லியில் உள்ள திகார் சிறை.இங்குள்ள கைதிகள் பலரிடம் செல்போன் இருப்பதாக கடந்த ஜனவரி 5ம் தேதி சிறை வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை (Raid)

இதையடுத்து வார்டன்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வார்டன்கள் சோதனை செய்து வருவதைபார்த்ததும் விசாரணைக் கைதி ஒருவர் தன் கையில் வைத்திருந்த செல்போனை மறைப்பதற்கு வழியில்லாததால் அதை வாயில் போட்டு விழுங்கியுள்ளார்.

இதையடுத்து சிறை ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். செல்போனை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளனர்.

குற்றக் கூட்டணி

பல்வேறு இடங்களில் சிறு சிறு குற்றங்கள் செய்து பிடிபட்டவர்கள் சிறையில் ஒன்றாக இருக்கும் போது நட்பாக பழகுகிறார்கள் பின்னர் அவர்கள் வெளியில் வந்ததும் ஒன்றாக சேர்ந்து பெரிய அளவிலான குற்றங்களை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

மேலும் படிக்க...

அறிமுகமானது காற்றை நிரப்பி பயணிக்கும் சூப்பர் ஸ்கூட்டர்!

ரூ.17 லட்சம் சம்பாதிக்க LIC-யின் சூப்பர் பாலிசி!

English Summary: Try not to get caught in the prisoner-trial of swallowing a cell phone!
Published on: 08 January 2022, 10:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now