சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 June, 2020 8:46 PM IST
Credit by : The hindu
Credit by : The hindu

ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையியல் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பணிகளை தோட்டக்கலை துறை, மீண்டும் துவங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரையிலான முழு ஊரடங்கு (Lockdown) மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலங்களில் சில குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மளிகைக்கடைகள், பழ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும். பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளுக்குள்ளேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

காய்கறி பழங்கள் விற்பனை

இந்நிலையில் சென்னையில் உள்ள, 15 மண்டலங்களிலும் நடமாடும் கடைகள் வாயிலாக காய்கறிகள், பழங்கள் விற்பனையை தோட்டக்கலை துறையால் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, அனைத்து இடங்களிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடங்கியுள்ளனர்.

Credit by : Times of india
Credit by : Times of india

பொதுமக்கள் வரவேற்பு

தரமான காய்கறிகள், பழங்கள் குறைவான விலையில் விற்கப்படுவதால், அவற்றை வாங்கவும் பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிகளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில மண்டலங்களில், காய்கறிகள் பழங்கள் என தனித்தனியாக விற்பனை செய்யப்படுவதால், ஏதேனும் ஒன்றை மட்டுமே பொதுமக்கள் பெற்று வருகின்றனர். அனைத்து மண்டலங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை விற்பனை செய்வதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கவை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?

English Summary: Vegetable Sales on door delivery due to lockdown - Horticulture Department Organized!
Published on: 20 June 2020, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now