Blogs

Tuesday, 11 July 2023 11:02 AM , by: Deiva Bindhiya

WhatsApp New privacy features: mute unknown calls and privacy check

வாட்ஸ்அப்பில் ஏதேனும் புதிய அம்சத்தை வடிவமைக்கும் போது, ​​அவர்கள் செய்திகளின் தனியுரிமையை கருத்தில் அம்சங்களை வடிவமைக்கிறார்கள். இன்று மற்றும் ஒர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய தனியுரிமை அம்சங்கள் (Privacy Checkup Feature): தெரியாத அழைப்புகளை முடக்கு மற்றும் தனியுரிமைச் சரிபார்ப்பு

இன்று, இந்த வளர்ந்து வரும் பட்டியலில் இரண்டு புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளது வாட்ஸ்ஆப்: தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை முடக்கு மற்றும் தனியுரிமைச் சரிபார்ப்பு, இப்போது பயனர்களுக்குக் கிடைக்கும்.

அறியப்படாத அழைப்புகளை முடக்கும் அம்சம் உங்களுக்கு அதிக தனியுரிமையையும், உங்கள் உள்வரும் அழைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக ஸ்பேம், ஸ்கேம் மற்றும் அறியப்படாத அழைப்புகளை, இந்த அம்சம் தானாகவே தடுக்கிறது. இந்த அழைப்புகள் வரும்போது உங்கள் மொபைல் ஒலிக்காது, ஆனால் அவை உங்கள் அழைப்புப் பட்டியலில் காணக்கிடைக்கும், ஏனெனில் இந்த அழைப்புகளில் ஒன்று உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்.

மேலும் படிக்க: தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!

இது தவிர, பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய, தனியுரிமைச் சரிபார்ப்பு என்ற மற்றொரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப், இதன் மூலம் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் ஒருவருக்கொருவர் தெரிவிக்க முடியும்.

இந்த அம்சம் முக்கியமான தனியுரிமை அமைப்புகளின் மூலம் படிப்படியாக உங்களை அழைத்துச் செல்கிறது, எனவே நீங்கள் ஒரே இடத்தில் இருந்து சரியான அளவிலான பாதுகாப்பைத் தேர்வு செய்யலாம். உங்கள் தனியுரிமை அமைப்புகளில் 'சரிபார்ப்பைத் தொடங்கு அதாவது ப்ரைவசி செக்அப்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் செய்திகள், அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் தனியுரிமையின் பல அடுக்குகளை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள்.

உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம், ஏனென்றால் மக்கள் தொடர்புகொள்வதற்கு பாதுகாப்பான தளம் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் செய்தியை புதிய வழியில் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது, இதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரிய வைக்க முடியும். இந்த வாரம் முதல், மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை தனிப்பட்ட செய்தி மூலம் தொடர்புக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:

WhatsApp செயலில் அட்டகாசமான புதிய அம்சம் - மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்!

இப்போது உங்கள் WhatsApp கணக்கில் 4 சாதனங்களை இணைக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)