Farm Info

Wednesday, 22 June 2022 08:34 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த, சிலாவட்டம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 34,621 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அலட்சியம்

இதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டையில், 17,650 நெல் மூட்டைகள் அரசு திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மீதம், 16,977 நெல் மூட்டைகள், ஒரு மாதமாக சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லாமல், கொள்முதல் நிலையத்திலேயே பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் வேதனை

இந்நிலையில் தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அவ்வாறு பெய்த மழையின் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. தாங்கள் உயிரைக்கொடுத்து, விளைவித்த நெல்மூட்டைகள், சேதமாகி உள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, அரசு உடனடியாக நனைந்த நெல் மூட்டைகளை விரைந்து லாரிகள் மூலம் அரிசி ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகசாலை ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், இ- சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 1,400 மூட்டைகள் தேக்கி வைக்க இடம் வசதி உள்ளது.இந்நிலையில், மூன்று நாட்களாக நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி வராத நிலையிலும், விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கப்பட்டு உள்ளது. இதனால், 4,500 நெல் மூட்டைகள் பாகசாலை நெல் கொள்முதல் நிலையத்தில் குவிந்தன.

3,100 நெல் மூட்டைகள்

இ -- சேவை மையத்தில், 1,400 நெல் மூட்டைகள் வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3,100 நெல் மூட்டைகள் வெளியில் வைக்கப்பட்டு தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக இரவில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமாகின.

மேலும் படிக்க...

இந்த 5 ரூபாய் இருந்தால் ரூ.30,000 சம்பாதிக்கலாம்!

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)