மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 October, 2020 7:39 AM IST

துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியம் பெற்று பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

  • மாவட்டத்தில் நீர் ஆதாரம் மற்றும் மழைப்பொழிவு குறைந்து வருவதால் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கத்தில் விவசாயிகள் செயல்பட வேண்டும்.

  • பாசனநீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்பாசன பாதுகாப்பான குறு வட்டங்களில், குறுகிய ஆழக்கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

  • மேலும், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15,000க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் (ஜஎஸ்ஐ சான்று பெற்ற குழாய்கள்) அமைப்பதற்கு 50 சதவீத மானிய தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000க்கு மிகாமலும் வழங்கப்பட உள்ளது.

  • பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவு வதற்கான செலவில் 50% ஒரு கனமீட்டருக்கு ரூ.350க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படுகிறது.

  • மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது விண்ணப் பங்களை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ஏடிஎம்மில் ரொக்கப்பணம் செலுத்தினால் இனி கட்டணம் - ICICI வங்கி அறிவிப்பு!

தீபாவளி Special offerல் வட்டி விகிதம் அதிரடிக் குறைப்பு- வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்!

English Summary: 50% subsidy for farmers in water management scheme!
Published on: 22 October 2020, 07:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now