அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 July, 2022 7:52 PM IST
A high-yielding loquat tree even in barren lands!

எதையும் தாங்கும் தன்மை கொண்ட சீமை இலந்தையை கைவிடப்பட்ட நிலங்களில் கூட சாகுபடி செய்யலாம். பிரச்னைக்குரிய மண்ணிலும் நஷ்டம் தராது. பழ மரக்கன்றுகள் நடுவதற்கு மண்ணில் கார, அமில நிலை சமமாக இருப்பது நல்லது. மானாவாரிப்பகுதி பழங்களின் அரசன் என்று சொல்லப்படும் சீமை இலந்தைக்கு வறட்சி தாங்கும் சக்தி அதிகம்.

மண் சத்து (Soil nutrients)

மண் ஆழம் குறையாமல் இருக்க வேண்டும். நிலைத்து நீடித்து வரவு தர சரியான பயிரை நிபுணர்களின் கள ஆய்வுடன் தேர்வு செய்வது நல்லது. மண்ணின் அடிப்படை சத்து இருப்பு எவ்வளவு என்று ஆய்வு செய்து அதன் மின்கடத்தும் திறனை அளவிட வேண்டும். மின்கடத்து திறன் மிக அதிகமாக குறியீடு எண் 4-க்கு மேல் இருந்தால் வேறு பயிர்கள் வளராது. அந்த நிலம் சாகுபடிக்கு லாயக்கற்றது என கூறப்படும்.

சீமை இலந்தைப்பழ மரம் (Loquat tree )

சீமை இலந்தைப்பழ மரம் மட்டும் வறண்ட கோடையில் கூட இலைகளை குறைத்துக் கொண்டு, பின்னால் துளிர்த்து மகசூல் தரும் திறன் பெற்றது. கார அமில நிலைப்புள்ளி 8-க்கு மேல் இருந்தால் கூட அந்த மண்ணில் சாகுபடி செய்யலாம். அந்த மண்ணுக்கேற்ற மரவகை அல்லது பழவகை கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வட்டப்பாத்தி அமைத்து சொட்டு நீர்ப்பாசனத்துடன் ஓரடி உயர வரப்பு எடுத்து மேட்டுப்பகுதியில் கன்றுகளை நட்டு மண்ணில் நீரை பாய்ச்ச வேண்டும். பயிரின் தேவைஅறிந்து அந்த அளவு மட்டுமே சொட்டு நீர்ப்பாசன முறையை செயல்படுத்தினால் சீமை இலந்தை பயிர் நல்ல லாபம் தரும்.

இளங்கோவன்
வேளாண்மை இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125

மேலும் படிக்க

தலைவலியை குணப்படுத்தும் மீன்: ஆய்வில் தகவல்!

ஊட்டியில் தேசிய அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கம்!

English Summary: A high-yielding loquat tree even in barren lands
Published on: 27 July 2022, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now