மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 June, 2021 6:46 PM IST

தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தியை அதிகரிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தென்னை ஆலை உரிமையாளர்களும், தென்னை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர், உடுமலையில் நீரா பானம் உற்பத்தி

கோவை, திருப்பூர், உடுமலை உட்பட தமிழகத்தில் 14 நிறுவனங்களுக்கு நீராபானம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அரசின் அனுமதியை தொடர்ந்து நிறுவனங்கள் ஆர்வமுடன் உற்பத்தியில் ஈடுபட்டன. ஆனால்,தொடங்கிய வேகத்தில் பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, தற்போதைய நிலையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே ‘நீரா' உற்பத்தியில் உள்ளன. இதற்கு அரசின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

நீரா பானம் - திமுக தேர்தல் அறிக்கை

இதைத்தொடர்ந்து, திமுக தேர்தல்அறிக்கையில் ‘நீரா' உற்பத்தியை ஊக்குவிக்கவும், விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அதனடிப்படையில், துறை ரீதியாகநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

விற்பனை நடவடிக்கை தேவை

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள உடுமலை தென்னை விவசாயிகள், தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகள் அடங்கியது ‘நீரா' பானம். ஆனால், ஒருநாள் மட்டுமே அதன் ஆயுள். அடுத்தநாள் கெட்டுவிடும். அதற்குள்ளாகவிற்றாகவேண்டும். உடுமலையில் உற்பத்தியாகும் பானத்தை உடனடியாக விற்பதற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவு

ஒவ்வொரு நிறுவனமும் தலா 100 மரங்களில் ‘நீரா' எடுக்க முதல்கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான ஆய்வறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க....

பருப்பு விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! : ஒருங்கிணையும் மத்திய - மாநில அரசுகள்!

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வெங்காய விதை வினியோகம்!

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் புதியத் திட்டங்கள்!

 

English Summary: Action to increase ‘Nira’ drink production! - Coconut farmers happy !!
Published on: 19 June 2021, 06:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now