அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 March, 2023 12:32 PM IST
Agri Stack Program invites Tamil Nadu farmers to register on the GRAINS website

Tamil Nadu வேளாண்‌ அடுக்ககம்‌ (Agri Stack) திட்டமானது ஏப்ரல் 01, 2023 முதல்‌ செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண்‌ அடுக்ககம்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ நில விவரங்களுடன்‌ இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விபரம்‌, நில உடைமை வாரியாக புவியியல்‌ குறியீடு செய்தல்‌ மற்றும்‌ நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு GRAINS (Grower Online Registration Of Agricultural Input System) என்ற வலைதளம் உருவாக்கப்படவுள்ளது.

Grains வலைதளத்தில்‌ விவசாயிகள்‌ பயனடையும்‌ வகையில்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, உணவு வழங்கல்‌ துறை, வேளாண்‌ பொறியியல்‌ துறை, ஊரகவளர்ச்சித்துறை, கால்நடைபராமரிப்புத்‌ துறை, வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்‌ துறை, விதை சான்றளிப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும்‌ சர்க்கரைத்துறை ஆகிய துறைகள்‌ இணைக்கப்படவுள்ளது.

GRAINS வலைதளத்தின்‌ நன்மைகள்‌:

அரசின்‌ நலத்திட்டங்கள்‌ சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்‌. ஒற்றைசாளர (Single Window Portal) வலைதளமாக செயல்படுவதால்‌ விவசாயிகளுக்கு அனைத்து பயன்களும்,‌ ஒரே இடத்தில்‌ பதிவுசெய்து அரசின்‌ உதவிகளை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. ஒவ்வொரு முறையும்‌ பயன் பெற விவசாயிகள்‌ விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள்‌ இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்‌. விவசாயிகள்‌ நேரடியாக வலைதளத்தில்‌ பதிவு செய்வதால்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ அரசின்‌ பயன்களை பெற்றுக்கொள்ளலாம்‌.

வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும்‌ விவசாயிகளின்‌ அடிப்படை விவரங்கள்‌ மற்றும்‌ பயிர்‌ விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்கமுடியும்‌. திட்ட நிதி பலன்களை ஆதார்‌ எண்‌ அடிப்படையில்‌ வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்றம்‌ மூலம்‌ அனுப்பப்படும்‌ போன்ற நன்மைகளை, இவ்வலைதளத்தின்‌ மூலம்‌ பெறலாம்‌.

மேலும் படிக்க:

தர்மபுரியில் இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லையில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்

விவசாயியின்‌ விவரங்களை Grains வலைதளத்தில்‌ பதிவுசெய்ய தேவைப்படும்‌ ஆவணங்கள்‌

  • விவசாயியின்‌ ஆதார்‌ அட்டை நகல்‌ (Aadhar Card Copy)
  • விவசாயியின்‌ புகைப்படம்‌ (Passport Size Photo)
  • வங்கிகணக்கு புத்தக நகல்‌ (Bank Passbook Copy)
  • நிலபட்டா ஆவண நகல்‌ (Land Document Copy)

எனவே, அனைத்து விவசாயிகளும்‌ மேற்கண்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்‌, உதவி வேளாண்மை அலுவலர் ‌/ உதவி தோட்டக்கலை அலுவலரிடம்‌ உடனடியாக ஒப்படைத்து Grains வலைதளத்தில்‌ தங்களின்‌ அடிப்படை விபரங்கள்‌ பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்து அரசின்‌ நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது‌.

மேலும் படிக்க:

வேலை வேண்டி ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கக் கோரி போராட்டம்

TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?

English Summary: Agri Stack Program invites Tamil Nadu farmers to register on the GRAINS website
Published on: 24 March 2023, 12:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now