மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 June, 2021 12:41 PM IST

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து, வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராமசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கூறியதாவது,

பூச்சி தாக்குதலால் பலம் இழக்கும் மரங்கள்

சிவப்பு கூன் வண்டு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் தண்டின் மேல் பகுதியில் சிறு துவாரங்கள் தென்படும். இந்த துவாரங்களின் வாய்ப் பகுதியில் சக்கைகள் வெளியே தள்ளப்பட்டு, ஒருவித பழுப்பு நிற திரவத்தை அந்த வாய்ப் பகுதியில் காணலாம். பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கும்போது மரத்தின் குருத்து பகுதியில் வாடல் போன்ற அறிகுறி தென்படும். இந்த கூன் வண்டுகள் தென்னை மரத்தின் தண்டை குடைந்து அதிலுள்ள திசுக்களை தின்றுவிடும். எனவே, அந்த மரம் பலமிழந்து இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னந்தோப்புகளில் மடிந்து கிடக்கும் மக்கிய தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் புழுக்கள் வாழும். ஆகவே, அவற்றை உடனுக்குடன் அகற்றி விடவேண்டும். எரித்தோ அல்லது புதைத்தோ அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

தென்னை மரங்களில் உள்ள இலைகளை வெட்டக் கூடாது. அப்படியே வெட்டும் பட்சத்தில் 120 செ.மீ. அளவுக்கு விட்டு வெட்ட வேண்டும். விளக்குப்பொறி மற்றும் இனக்கவா்ச்சிப் பொறி வைத்து வண்டுகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

வேதியியல் முறைகள்

இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு வேப்பங்கொட்டை பொடி கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை தென்னை மரங்களின் விரவி மட்டை இடுக்குகளில் வைப்பதன் மூலம் சிவப்பு கூன்வண்டு முட்டை இடுவதை தவிா்க்கலாம்.

சிவப்பு கூன் வண்டுகளை கவர கரும்புச்சாறு 2.5 கிலோ, ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி அசிட்டிக் அமிலம் (அன்னாசி அல்லது கரும்புச்சாறில் ஊறவைத்தது) இவற்றை நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஓா் ஏக்கருக்கு 30 வீதம் வைக்க வேண்டும்.

தீவிர தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தால் 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் உடன் 10 மில்லி தண்ணீா் கலந்து வோ் மூலம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மேலும் படிக்க....

பாசன நீர் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் பப்பாளி!

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: Agriculture department advices on pest management methods to contol Red beetles on coconut
Published on: 01 June 2021, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now