மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 May, 2021 8:56 AM IST
Credit : Facebook

மேட்டூர் அணையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என்று, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12ல் (On June 12th)

தமிழகத்தின் முக்கிய வேளாண் மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் இருந்துத் திறக்கப்படும் நீரைக் கொண்டு, 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

அணை திறப்பதில் சிக்கல் (Problem opening the dam)

ஆனால் சில ஆண்டுகளில் தேவையான அளவுத் தண்ணீர் அணையில் இல்லாத பட்சத்தில், தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.

நீர் திறக்கும் வழிமுறை (Water opening mechanism)

பாசனத்துக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடி, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 101 அடியாக இருந்தது. இதனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்துத் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போதைய நிலவரம் (Current situation)

நடப்பாண்டில் தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 97.72 அடி. நீர் இருப்பு, 61.92 டி.எம்.சி.,யாக உள்ளது. நீர் திறக்க இன்னும், 29 நாள்கள் உள்ளன. தற்போது குடிநீருக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் ஜூன், 12க்குள் இருப்பு மேலும், 2 டி.எம்.சி., குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், அன்றைய நாளிலும், குறைந்தபட்ச நீர் இருக்கும்.

அணையைத் திறக்க வாய்ப்பு (Opportunity to open the dam)

எனவே, இரண்டாவது முறையாக தொடர்ந்து, நடப்பாண்டிலும் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்துக்கு நீர் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு (Consultation with farmers)

பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்றக் இக்கூட்டத்தில், நடப்பாண்டுப் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

முதலமைச்சர் அறிவிப்பார் (The Chief Minister will announce)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...

விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!

English Summary: Announcement on Mettur Dam opening on June 12 - Minister Duraimurugan confirms!
Published on: 17 May 2021, 08:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now