மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 June, 2021 10:26 PM IST
Credit : IndiaFilings

திருப்பத்தூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வட்டார வேளாண்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் ஜே.சி.ராகினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மழைத்தூவானுக்கு மானியம் (Subsidy for rainforest)

மத்திய அரசின் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் வேளாண் பயிர்களுக்குச் சொட்டுநீர் பாசனம், தெளிப்பான், மழைத்தூவான் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகின்றன.

ரூ.2.20 கோடி ஒதுக்கீடு (An allocation of Rs. 2.20 crore)

கந்திலி வட்டாரத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2 கோடியும், திருப்பத்தூர் வட்டாரத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்க ரூ.2 கோடியே 20 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருவிகள் (Tools)

மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் தென்னை பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் நிலக்கடலை, காராமணி போன்ற பயறு வகை பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப் பாசன கருவிகள் தரப்படுகின்றன.

100 % மானியம் (100% subsidy)

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப் படுகின்றன.

ரூ.40,000 மானியம் (Rs.40,000 grant)

மேலும், இத்திட்டத்தின்கீழ், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு தொட்டி அமைக்க அதிகபட்சமாக ரூ.40,000, மின் மோட்டார் அமைக்க ரூ.15,000 மற்றும் ஒரு ஏக்கர் பரப்பளவில் நீர்ப் பாசனம் அமைக்க அதிகபட்சமாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது.

பின்னேற்பு மானியம் (Compensation grant)

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகள் நீர் பாசனக் அமைச்சுத் தரல்வாய்கள் தோண்டுவதற்கு ஒரு ஏக்கருக்கு 3,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வு முடிவு அறிக்கை ஆகியவற்றுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஆன்லைனில் பதிவு செய்து பயனடையலாம்.

திருநெல்வேலி

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் (காய்கனி, பழங்கள், பூச்செடிகள், மலைப்பயிர்கள்) சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம் வழங்க 766 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசனம் மானியம் (Drip Irrigation Subsidy)

இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் அமைத்துக் கொடுக்கப்படும்.

இதுத் தவிர சொட்டுநீர்ப் பாசனம் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகளுக்குப் புதிதாக டீசல், மின்மோட்டார்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.15,000மும், ஆழ்துளைக் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.25,000மும் வழங்கப்படுகிறது.

ரூ.40,000 மானியம் (Rs.40,000 grant)

தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.10,000மும், தரைநிலையில் தண்ணீர்த் தொட்டி கட்ட அதிகபட்சமாக ரூ.40,000மும் மானியமாக வழங்கப்படும்.

மேலும் படிக்க...

சரியான விவரம் இல்லாமல் இதை தொடாதீர்கள்: குறிப்பாக நீங்கள்

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

ரத்த ஓட்டத்தை சீராக்க இவை மட்டும் போதும்!

English Summary: Are you ready to set up micro-irrigation in subsidy?
Published on: 15 June 2021, 10:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now