பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 March, 2022 6:26 PM IST
Smart Greenhouses

தண்ணீர் தேவை மிகக் குறைவு. ஆண்டின் எல்லா பருவத்திலும் பழமும் காய்களும் விளைந்து தள்ளும். இதெல்லாம் எங்கே? 'ஸ்மார்ட் கிரீன்ஹவுஸ்' எனும் நவீன பசுமைக்குடில்களில் தான்.வேளாண்மையின் வருங்காலம் அதிதிறன் பசுமைக்குடில்கள் தான் என்பதில் விவசாய வல்லுநர்களுக்கு சந்தேகமில்லை. எனவேதான், ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கும், 'சோர்சஸ்' என்ற அமைப்பு, பசுமைக்குடில்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நல்கும் சந்தா சேவையை தொடங்கியுள்ளது. இது உருவாக்கியுள்ள 'சைப்ரஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு பசுமைக்குடில் நிர்வாகியும் பணியாளர்களும் தினமும் விளைச்சலைப் பெருக்கும் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

பசுமைக்குடில்கள் (Greenhouses)

வெளி நிலத்தில் செய்யப்படும் வேளாண்மை, காற்று மாசுபாட்டுக்கு வழிவகுக்கிறது. இதை குறைக்க, பசுமைக் குடில்களுக்குள், அலமாரி போல உயர மான பல அடுக்குகளில் பயிர்களை வளர்ப்பது நல்ல உத்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பசுமைக்குடில்களுக்குள், காற்று, நீர், மண் மற்றும் செடிகள் ஆகியவற்றில் பலவித உணரிகளை பதிக்கலாம். பிறகு, அவை தரும் தரவுகள் வாயிலாக செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

மேலும், எந்த தாவரத்திற்கு எந்த வகை சத்து தேவை, நீர் தேவை, வெயில் தேவை போன்றவற்றை கவனித்து, குடில் நிர்வாகிகளுக்கு துல்லியமான ஆலோசனைகளை சைப்ரஸ் மென்பொருள் வழங்குகிறது. தற்போது சிலவகை கீரைகளையே நவீன பசுமைக்குடில்கள் பயிரிடுகின்றன.

தற்போது நகரின் மையப்பகுதிகளில் உள்ள கட்டடங்களிலேயே பசுமைக்குடில்கள் அதிகம் தொடங்கப்படுவதால், பலவகை காய் கறிகள், பழங்களையும் பயிரிட முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு, சைப்ரஸ் போன்ற மென்பொருள்கள் உதவும்.

மேலும் படிக்க

இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு!

தமிழக வேளாண் பட்ஜெட் 2022: முக்கிய சிறப்பம்சங்கள்!

English Summary: Artificial intelligence technology in smart greenhouses!
Published on: 19 March 2022, 06:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now