Farm Info

Saturday, 21 May 2022 12:10 AM , by: R. Balakrishnan

பெங்களூரு தக்காளி, நம் களி மண் நிலத்தில் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விவசாயி வி.எம்.ஹரி பல்வேறு தகவல்களை கூறினார். முன்பெல்லாம் தமிழகத்தில் விலைக்கு மட்டுமே கிடைத்த பெங்களூரு தக்காளி, இன்று விளைவிக்கப்படுகிறது.

பெங்களூரு தக்காளி (Bangalore Tomato)

சவுடு கலந்த களி மண் நிலத்தில், புதுப்புது ரகங்களை பயிரிடுவது வழக்கம். நடப்பு ஆண்டு, தை பட்டத்தில் பெங்களூரு ரக தக்காளி சாகுபடி செய்தேன். இது, நம் ஊர் சவுடு கலந்த களி மண்ணுக்கு எவ்வாறு மகசூல் கிடைக்குமோ என யோசித்தேன். எதிர்பார்த்த மகசூலை விட நன்றாக விளைந்து, கூடுதலாக கிடைத்தது.

உதாரணமாக, 10 சென்ட் நிலத்தில், பெங்களூரு தக்காளி சாகுபடி செய்தால், 45 நாட்களுக்கு பின் அறுவடை துவங்கும். அறுவடை முடிவில் ஒவ்வொரு செடிக்கும், 10 கிலோ தக்காளி வரை, மகசூல் பெற முடிகிறது.

மகசூல் (Yield)

தக்காளி மகசூல் பொறுத்தவரை அன்று அன்று விற்பனை செய்யப்படும். சந்தை நிலவரத்தை பொறுத்து, தக்காளியில் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

தீராத நோய்களை சுக்குநூறாக்கும் சுக்குவின் அற்புதப் பயன்கள்!

விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)