Farm Info

Thursday, 03 September 2020 09:09 AM , by: Daisy Rose Mary

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 20 நாட்களில் 8,80,68,114 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்களில் தெரிவிக்க்கின்றன.

PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான 6-வது தவணையை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதன் மூலம் இது வரை 8,80,68,114 விவசாயிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசு ரூ.2000 வீதம் செலுத்தியுள்ளது.

கூடுதல் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு

பி.எம் கிசானில் நான்காவது தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரை சுமார் 10,45,00,137 விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக வழங்கியது. இதனால், இந்த திட்டத்தில் இணையை விவசாயிகள் அதிகம் ஆர்வம் செலுத்தினர்.

இந்த முறை 10.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஆறாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் கூடுதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசின் தவணை நவம்பர் மாதத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கணக்கு நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?

  • பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்களின் தவணை தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள முடியும். இதற்குக் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

  • உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்

  • முகப்புப்பக்கத்தில் "Farmers Corner"-ல் ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்க.

    பின் உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்

  • பிறகு "Get Date" என்பதை கிளிக் செய்க

  • இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.

கணக்கு நிலையே நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள் 

உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் அதற்கான விவரங்களை கணக்கு நிலையில் வழங்கப்பட்டு இருக்கும். அந்த விவரங்களுடன் உங்கள் பகுதி வேளாண் அதிகாரிகளை அணுகினால் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்

மேலும் படிக்க...

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)