மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 September, 2022 3:40 PM IST
Crop insurance for Rabi 2022-23 season: Collector appeals

நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16/- 15.6.22க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1990.82/- 15.06.2022க்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன்பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடன் பெறாத விவசாயிகல் பொது சேவை மைங்களில் முன்மொழிவு விண்ணப்பித்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

உழவர் நலத்துறை சார்பாக சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு

கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்

English Summary: Crop insurance for Rabi 2022-23 season: Collector appeals
Published on: 29 September 2022, 03:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now