மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 January, 2022 10:49 AM IST
Farmers will observe January 31 as the day of betrayal. Why?

பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பதாக குறிப்பிட்டார். அவர் ஏன்?, அவ்வாறு கூறினார். இதற்கான காரணம் என்ன? தெரிந்துக்கொள்ள கீழே படியுங்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் வரை டெல்லி எல்லையில் ஒய்வில்லா போராட்டத்தை நடத்தி வந்தனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்புக்கு பிறகு போராட்டத்தை விவசாயிகளஅ வாபஸ் பெற்று, அங்கிருந்து வீடு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து, தற்போது ராகேஷ் டிகைத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம்: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கடந்த டிசம்பர் 9ம் தேதி மத்திய அரசு கடிதம் அளித்தது. ஆனால் உறுதி அளித்தது போல் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடமாக, விவசாயிகள் குளிர், வெயில் என பாராமல் டெல்லி எல்லையில், 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர், நடத்திய போராட்டம் பற்றிய தகவல் நாடு முழுவதும் அறிந்ததே. இந்த போராட்டம், நல்ல முடிவுகளுடன் நிறைவுற்றது என நம்பியிருக்கும் நிலையில், திடீரென ராகஷ் டிகை கூறியது, சர்ச்சையாகி வருகிறது.

மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியும் எழும்புகிறது. இருப்பினும் இந்த சட்டங்கள் குறித்து உண்மையில் மத்திய அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து, நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விவசாய அமைப்புகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும். மேலும் ஜனவரி 31-ம் தேதியை அதாவது இன்று துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடைக்க உள்ளதாக, ராகேஷ் அவர்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவிளித்து, மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பர் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 : விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 16!

PM Kisan Yojana: விரைவில் 11வது தவணை; விவரங்கள் உள்ளே

English Summary: Farmers will observe January 31 as the day of betrayal. Why?
Published on: 31 January 2022, 10:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now