மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 June, 2021 7:13 AM IST
Credit : VTN News

விதை நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சான்று பெற்ற தரமான விதை நெல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், என விதை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, விதை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

குறுவை சாகுபடி

குறுவை நெல் சாகுபடி பணி தற்போது துவங்கியுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் விற்பனையின் போது, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண். ரகம், குவியல் எண், காலாவதி நாள் உட்பட அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.

சான்றிதழ் கட்டாயம் (Certification is mandatory)

விதை விற்பனையாளர்கள் விதையின் தரத்தை உறுதிப் படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாகக் கடையில் வைத்திருக்க வேண்டும்.

நடவடிக்கை பாயும் (The action will flow)

தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்றிதழ் இல்லாத விதைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது விதைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமம் பெற்ற இடத்தில் (Where licensed)

விதை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்த விதைகளைப் பாதுகாப்பாகவும், முறையாகவும், விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

விற்பனை ரசீது (Sales Receipt)

விவசாயிகளுக்கு, விதை விற்பனை செய்யும் போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில், விதையின் பெயர், ரகம், குவியல் எண். காலாவதி நாள் ஆகியவற்றுடன், விவசாயி பெயர், முகவரி மற்றும் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வு (Inspection)

இந்த விதிகளை மீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்! மத்திய அரசு தகவல்!

பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!

English Summary: If certified quality seed paddy is not sold, severe action!
Published on: 15 June 2021, 10:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now