மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 January, 2021 8:58 PM IST
Credit : Eirich

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நபருக்கு அதிகளவு யூரியா உரத்தை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உர விற்பனையாளர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திர பாண்டியன் விடுத்தள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உரம் கையிருப்பு (Fertilizer stock)

இம்மாவட்டத்தில் ராபி (Rabi) பருவ சாகுபடி பணி தீவிர மாக நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் மாவட்டத்தின் பல்வேறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.விவசாயிகளின் நலன் கருதி யூரியா உரம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்சியர் விசாரணை  (Collector Inquiry)

இந்நிலையில், மாதந்தோறும் அதிகளவு யூரியா வாங்கியோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரே விவசாயிக்கு அதிக உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு அவர்களின் விவசாயத் தேவைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் வாங்க வருவோர் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

உரிமம் நிரந்தரமாக ரத்து (The license permanently revoked)

இம்மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ஒரு நபருக்கு அதிகளவு யூரியா உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்களின் உர உரிமங்களை 14 நாள்கள் தற்காலிக ரத்து செய்து உத்தர விடப்பட்டது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் உரக் கட்டுப்பாட்டுச்சட்டம் 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

காய்கறிகளுக்கு காப்பீடு - மார்ச் மாதம் வரை காலக்கெடு!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

English Summary: If urea is sold forcibly, the fertilizer license will be canceled permanently
Published on: 08 January 2021, 08:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now