மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 July, 2020 6:30 AM IST
Credit: Exporters India

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சின்ன வெங்காயம் அழுகுவதைத் தவிர்க்க தேனி விவசாயிகள் பிரத்யேக முறையைக் கையாளுகின்றனர்.

தமிழக மக்களின் சாம்பாருக்கு கூடுதல் சுவை கொடுக்கும் சாம்பார் வெங்காயம், மாநிலத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படுவது வழக்கம்.

தர்மபுரி

அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சின்ன வெங்காயத்தை 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடுவார்கள். அதன்படி  நடப்பாண்டு அன்னசாகரம், எர்ரப்பட்டி, வெங்கட்டம்பட்டி, தம்மணம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, குழியனூர், இண்டூர், அதகபாடி உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அதகபாடி அருகே, கடந்த வைகாசி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அறுவடையின்போது பெய்த மழை காரணமாக, சின்ன வெங்காயத்தில் குறிப்பிட்ட அளவு அழுகிவிட்டது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வைகாசி பட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தோம். நடப்பாண்டில் அறுவடையின் போது, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. இதனால் நடப்பாண்டில் ஒரு ஏக்கருக்கு 8டன் மட்டுமே மகசூல் கிடைத்திருக்கிறது.

சுமார் ஒரு டன் வரை வெங்காயம் மழையின் காரணமாக அழுகிவிட்டது. ஒரு கிலோ சின்னவெங்காயம் 28 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டபோதிலும், பயிரிட்ட  விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என்றார்.

Credit: Agri-Doctor

தேனி

இதேபோல் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் சின்னவெங்காயம் சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. நடவு செலவு, உரம், கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவாகிறது. அவை 3 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஒரு கிலோ ரூ.20க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்வதால் அழுகும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் இங்கு வெங்காயம் அழுகுவதை தவிர்க்க விவசாயிகள் வெங்காயத்தை செடியுடன் பறித்து அதே இடத்தில் போட்டு வைக்கின்றனர்.பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் காய துவங்குகிறது. பின்னர் மழை பெய்தாலும் அழுகுவதில்லை.

இவற்றை ஒரு வாரம் கழித்து விற்பனைக்கு மார்க்கெட்டிற்கு அனுப்ப முடியும். இதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம். இந்த வழிமுறையைப் பின்பற்றியே விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!

வேளாண் பழமொழிகள்! தெரியுமா உங்களுக்கு?

English Summary: Impact of small onion yield due to continuous rains
Published on: 29 July 2020, 06:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now