மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 March, 2021 12:34 PM IST
Credit : Pinterest

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடிக்கு செய்வோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடரும் நோய்கள் (Continuing diseases)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ரசாயனங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதால்தான். பல்வேறு நோய்களும், நம்மைத் தொடர்கின்றன.

இதன் விளைவாக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே நஞ்சில்லா உணவு என அழைக்கப்படும், அங்கக வேளாண்மை , அதாவது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவி வருகிறது.

இயற்கை விவசாயம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அங்கக விளைபொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். 

மானியம் (Subsidy)

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்கப்பட்டு வருகிறது.

சான்றுக்கு ரூ.500 (Rs.500 per certificate)

இயற்கை முறையில் காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது

மேலும் விவரங்களுக்குப் புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் மற்றும் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !

நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு- விவசாயிகள் வேதனை!

English Summary: Invitation to apply for a grant to do organic farming!
Published on: 03 March 2021, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now