நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 March, 2022 10:35 PM IST
Jinguniana whip tree to control the wind!

கடலோர மாவட்டங்களில் தோட்டக்கால் பயிர்களில் காற்றால் ஏற்படும் சேதம் அதிகம். சேதத்தை தவிர்ப்பதற்கு 'ஜிங்குனியானா' சவுக்கு நடுவது நல்லது. புயல் மற்றும் அதிக காற்று காலங்களில் வாழை, முருங்கை, கொட்டைமுந்திரி மற்றும் தென்னை பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் வரப்பை சுற்றி மூன்று வரிசைகளில் ஜிங்குனியானா ரக சவுக்கை நட வேண்டும். பயிருக்கும் சவுக்கு கன்றுக்கும் இடையே இரண்டு மீட்டர் இடைவெளி வேண்டும். வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளி, மரத்திற்கு மரம் 2 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.

சவுக்கு மரங்கள் (Whip Trees)

மூன்று வரிசைகளையும் ஊடுபுள்ளி வடிவில் அமைக்கும் போது காற்று உட்புகுவது தடுக்கப்படும். சவுக்கு மரங்கள் காற்றின் வேகத்தை குறைப்பதால் சாகுபடி செய்துள்ள மரங்கள் சாய்வதை தடுக்கலாம். தென்னை, முந்திரி கன்றுகளை நட்ட பின்பு கூட சவுக்கு கன்றுகள் நடலாம். ஆனால் வாழைக்கன்று நடும் போது சவுக்கு கன்றையும் சேர்த்து நட வேண்டும். பத்து மாதங்களில் வாழையை விட சவுக்கு அதிக கிளை பரப்பி உயரத்தில் இருப்பதால் காற்றால் சாய்ந்து விழுவதை தடுக்க முடியும். அவ்வப்போது கவாத்து செய்து வெட்டும் கிளைகளை எரிபொருளாக பயன்படுத்தலாம்.

கூடுதல் லாபம் (Extra Income)

வரப்பை சுற்றி ஒரு ஏக்கருக்கு 240 மரங்கள் வளர்க்கலாம். 36 மாதங்களில் சவுக்கு நன்கு வளர்ச்சி அடைந்து விடும். நான்கு ஆண்டுகளில் 13 டன் சவுக்கு மகசூல் மூலம் ரூ.69ஆயிரம் வரை கூடுதல் லாபம் பெறலாம்.

கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம், கோவையில் உள்ள மரப்பயிர்கள் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் சவுக்கு கன்றுகள் கிடைக்கும்.

- மகேஸ்வரன், சபரிநாதன்
தொழில்நுட்ப வல்லுனர்கள்,
வேளாண் அறிவியல் மையம்
தேனி, 96776 61410

மேலும் படிக்க

வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிகவும்!

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: 'Jinguniana' whip tree to control the wind!
Published on: 13 March 2022, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now