நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2022 4:31 PM IST
Laser Leveling

மேடு பள்ளமான நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பள்ளமான இடத்தில் பயிர் அழுகும். மேடான இடத்தில் நிலம் காய்ந்து களை அதிகரிக்கும். 'லேசர் லெவலிங்' (Laser Leveling) கருவி மூலம் நிலத்தை சீராக சமப்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும் என்கிறார் மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராமசுப்ரமணியன். நிலத்தை சமப்படுத்தியதன் பலன் குறித்து ராமசுப்ரமணியன் கூறியதாவது:
முதலில் கோடை உழவு செய்த பின் லேசர் லெவலிங் கருவி கொண்டு ஒரு ஏக்கரை சமன்செய்ய 2 மணி நேரமானது. ஒருமணி நேரத்திற்கு ரூ.1200 கட்டணம் வாங்கினர். 4 ஏக்கரையும் சமப்படுத்திய பின் இயந்திர நடவு மூலம் கோ 51 நெல் ரகத்தின் 14 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நட்டேன். இது 110நாள் ரகம். இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

நல்ல மகசூல் (Good Yield)

தண்ணீர் பாய்ச்சும் போது நிலம் முழுக்க சமமாக பாய்வதால் களை கட்டுப்படுத்த முடியும். தண்ணீர் தேவை குறைவு. சூரிய ஒளி, காற்று, மண்ணிலிருந்து கிரகிக்கப்படும் சத்து அனைத்து பயிர்களுக்கு சமமாக கிடைக்கிறது. எலியினால் ஏற்படும் பயிர் சேதம் இல்லை. நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு குறைவு. மழை வெள்ளத்தால் பயிர் சாயாது. பயிர் நன்கு தூர் கட்டி நல்ல மகசூல் கிடைக்கும். அறுவடை செலவு குறைந்து மகசூல் அதிகம் (ஏக்கருக்கு 45 - 50 மூடை) கிடைக்கும் என்றார்.

இத்தொழில்நுட்பம் குறித்து மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி கூறியதாவது: ஆத்மா திட்டத்தின் கீழ் குலமங்கலத்தில் உள்ள ராமசுப்ரமணியன் வயலில் பண்ணைப் பள்ளி நடத்தப்பட்டு 25 விவசாயிகள் பங்கேற்றனர். விதைப்பது முதல் அறுவடை வரை 6 கட்டங்களாக பயிற்சி நடைபெற்றது.

மண்மாதிரி (Soil Sample)

நிலத்தை சீர்படுத்துவது, மண்மாதிரி எடுத்து உரமிடுவது, பசுந்தாள் பயிரிட்டு மடக்கி உழுவது, நெல் உயிர் உர விதைநேர்த்தி, பூசண கொல்லி விதைநேர்த்தி, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம், வரப்பில் உளுந்து பயறு விதைத்தல் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்துள்ளார். வேளாண் பொறியியல் துறை மற்றும் முன்னோடி விவசாயிகளிடம் இந்த கருவி வாடகைக்கு உள்ளது என்றார்.

தொடர்புக்கு - 95850 95748

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!

தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!

English Summary: Laser Leveling to the Land: A Fantastic Way to Increase Yield!
Published on: 05 February 2022, 04:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now