மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 October, 2020 7:21 PM IST

சம்பா நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத்தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்ற புதுக்கோட்டை வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கூறியதாவது:

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.

  • இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலையில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.

  • இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்தது போல் தோன்றும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும், அதிக உரம் இட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும்.

  • புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை இந்தத் தாக்குதல் அதிகமிருக்கும்.

  • இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

  • பரிந்துரைத்த அளவுக்கு மேல் இல்லாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடவேண்டும்.

  • விளக்குப் பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

  • நடவு செய்த 37,44 மற்றும் 51ம் நாட்களில் முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரம்மா கைலோனிஸ்ஸை ஏக்கருக்கு 2.சி.சி அளவுக்கு காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

Credit : Dinamani
  • ஒரு கூடைத் தவிட்டில் 100 மிலி மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும்.

  • ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரியை வடலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக் கொண்டு நெற்பயிரின் மேல் நன்குபடுமாறு இழுத்துச் செல்ல வேண்டும்.

  • இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும் போது, மடக்கப்பட்ட பகுதி விரிந்து விடும்.

  • இந்தத் தாக்குதல் கட்டுப்படவில்லை என்றால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 4 Gv என்றக் குருணை மருந்தினை 7.5 கிலோ முதல் 10 கிலோ வரை மண்ணில் இட்டு கட்டுப்படுத்தலாம்.

  • எனவே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் இலைச் சுருட்டு புழுவினைக் கட்டுப்படுத்திப் பயன் பெறலாம்.

  • இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

நெல்லில் புகையான் பூச்சித் தாக்குதல்- கட்டுப்படுத்த சில வழிகள்!

இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!

English Summary: Leaf curl worm infestation in paddy cultivation - easy ways to control!
Published on: 28 October 2020, 07:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now