Farm Info

Friday, 06 May 2022 04:22 PM , by: Dinesh Kumar

Modi Reviews the wheat supply situation and quality protocols....

மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், இந்திய கோதுமை மற்றும் இதர விவசாயப் பொருட்கள் உலகின் தரமான உணவாகவும் மற்றும் ஆதாரமாகவும் இருக்க இவை அனைத்தும் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவின் கோதுமை விநியோகம், இருப்பு மற்றும் ஏற்றுமதி குறித்து மோடி உரையாற்றினார். பின்னர் விவசாயிகளுக்கு உதவுமாறு அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, விவசாய உற்பத்தி, கொள்முதல் மற்றும் ஏற்றுமதி நிலை மற்றும் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் தற்போதைய சந்தை விகிதங்கள் ஆகியவற்றில் மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 இல் அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கம் குறித்தும் அதிகாரிகளுக்கு மோடி விளக்கினார்.

பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் உணவு, பொது விநியோகம் மற்றும் விவசாயத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2022-23 சந்தைப்படுத்தலில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 111.32 மில்லியன் டன்கள் என்ற முந்தைய மதிப்பீட்டில் இருந்து கிட்டத்தட்ட 5.7 சதவீதம் குறைந்து 105 மில்லியன் டன்களாக இருக்கும் என்றும், அதிகாரப்பூர்வ கொள்முதல் 19.5 மில்லியனாகக் குறையும் என்றும் உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆண்டு இறுதி பங்குகள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு போதுமானதாக கருதப்படுவதால், நாடு எந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதிக்காது என்று அவர் கூறினார்.

கோடையின் ஆரம்ப வருகை காரணமாக, விவசாய அமைச்சகம் 2021-22 பயிர் ஆண்டுக்கான கோதுமை உற்பத்தி மதிப்பீட்டை முன்பு 111.3 மில்லியன் டன்களில் இருந்து 105 மில்லியன் டன்களாகக் குறைத்துள்ளது என்றார். 2020-21 பயிர் ஆண்டில், இந்தியா 109.59 மில்லியன் டன் கோதுமையை (ஜூலை-ஜூன்) உற்பத்தி செய்தது எனவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 2022-23 சந்தைப்படுத்தல் ஆண்டில் (ஏப்ரல்-மார்ச்) அரசாங்கத்தின் கோதுமை கொள்முதல் 19.5 மில்லியன் டன்னாகக் குறையும் என்று உணவு செயலாளர் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) ஒப்பிடும்போது சில மாநிலங்களில் கோதுமையின் சந்தை விலை உயர்த்தப்பட்டிருப்பது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் இருப்பு மேலும் எதிர்பார்க்கப்படும் நிலையில், பல காரணங்களால், முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க விலை குறைவு இருக்கும் என்றார். சில மாநிலங்களில் மட்டும் மதிப்பிடப்பட்டதை விட குறைவான உற்பத்தி இருக்கும்.

மேலும் படிக்க:

காலநிலை மாற்றம் உணவு விநியோகத்தை குறைப்பதால் உலகளாவிய வறுமை அதிகரிக்கும்: ஐ.நா சபை

கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)