நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2020 7:51 AM IST
Credit : Hindu tamil

உடுலைப்பகுதிகளில் பட்டுப்புழுக்களை பராமரிக்க முடியாத விவசாயிகள், மல்பெரி இலைகளை விற்பனை செய்து தற்காலிகமாக வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பட்டுப்புழு உற்பத்தி (Silkworm Production)

நுாலிழை நீளம் மிகுந்த வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், தமிழகத்தில், உடுமலை பகுதியே முன்னிலையில் உள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில், ஈடுபட்டு வருகின்றனர்.

விலை இல்லை (No Rate)

ஆனால் கடந்த சில மாதங்களாக, அரசு கொள்முதல் மையங்களில், பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை. தொடர் பாதிப்பால், சில பகுதிகளில், மல்பெரி செடிகளை அகற்றி விட்டு, மாற்றுச்சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு விவசாயிகள்சிலர் தள்ளப்பட்டனர்.

அதேநேரத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலுக்காக அதிகளவு முதலீடு செய்துவிட்ட விவசாயிகள், மல்பெரி செடிகளை அகற்ற முடியாமலும், தொடர் பாதிப்பால், புழு வளர்ப்பு மனையில், பட்டுப்புழுக்களை வளர்க்க இயலாமல், தவிக்க நேர்ந்தது.

Credit : Hindu Tamil

இந்நிலையில், வறட்சி உட்பட்ட காரணங்களால், மல்பெரி இலைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதை மோப்பம் பிடித்துக்கொண்ட சில விவசாயிகள், புழு வளர்ப்பை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு மல்பெரி இலைகள் விற்பனையைக் கையில் எடுத்துள்ளர். இந்த விவசாயிகளிடம், மல்பெரி இலைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெண்பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய, ஒருங்கிணைந்து, அருகருகே உள்ளவர்கள், ஒரே நேரத்தில், புழு வளர்ப்பை துவக்குவது வழக்கம். இதனால், கொள்முதல் மையங்களுக்கு, பட்டுக்கூடுகளை ஒரே வாகனத்தில், கொண்டு செல்வது உட்பட பல நன்மைகள் கிடைக்கும்.

ஆனால் தற்போது, பட்டுப்புழுக்களை பராமரித்து வருபவர்களுக்கு, மல்பெரி இலை தட்டுப்பாடு ஏற்பட்டதால், புழுக்கள் வளர்த்தாத விவசாயிகளிடமிருந்து இலைகளை மட்டும் வாங்கி கொள்கின்றனர். இதனால், இரு தரப்பினரும் பாதிப்பிலிருந்து தப்புவதுடன், தற்காலிகமாக வருவாயும் கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !

பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறக்கும் ஈஷா!

English Summary: Mulberry tweaked - Farmers who have seen the income from selling!
Published on: 30 September 2020, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now