சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 23 March, 2021 1:11 PM IST

இயற்கை உயிரியல் பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், ரசாயன உரம் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கலாம் என வேளாண்துறை அறியுறுத்தியு ள்ளது. விவசாயிகள் இயற்கை உயிரி பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

நவீன வேளாண்மையில், பக்க விளைவுகள் இன்றி பயிர்களின் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதில், நுண்ணுயிரி மருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. நுண்ணுயிரிகள் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி விரட்டிகளின் பயன்பாடு பரவலாகும் போது, ரசாயன பூச்சி கொல்லிகளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து, விளைபொருட்கள் பாதுகாக்கப்படும்.

இயற்கை பூச்சி விரட்டிகளின் பயன்கள்

நுண்ணுயிரி பூச்சி விரட்டிகளின் நன்மைகள் குறித்து, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறுகையில், உயிரி பூச்சி விரட்டிகள், ரசாயன பூச்சி கொல்லிகள் போல், மண், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதிப்பதில்லை.

  • அனைத்து வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த, 'வெர்டிசிலியம் லக்கானி' நுண்ணுயிரியை பயன்படுத்தலாம். இந்த நுண்ணுயிரி, பூச்சிகளின் உடம்பினுள் நுழைந்து, இயக்கத்தை முடக்கி, 5 முதல், 7 நாட்களுக்குள் அழித்துவிடும்.

  • காய்துளைப்பாளை கட்டுப்படுத்த, 'பெவேரியா பேசியானா' நுண்ணுயிரியை பயன்படுத்தலாம். இது பூச்சிகளின் செரிமானப்பகுதியை தாக்கி அழிக்கும்.

  • மண் சார்ந்த பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த, ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் ஹாசனியம் நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம். இவை, வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்.

  • சூடோமோனஸ் பூஞ்சாண கொல்லியாக மட்டுமின்றி, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

  • பயிர்களை தாக்கும் பெரிய வகை புழுக்களை கட்டுப்படுத்த, 'பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்' உயிரி பயன்படுகிறது.

  • இவை தவிர, தற்போது அதிக பயன்பாட்டில் உள்ள உயிர் உரங்கள், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரிலம், ரைசோபியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு அறிமுகம் உள்ளது.

இவை, வேளாண் துறையால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

கரும்புப் பயிரில் பஞ்சு அசுவினி நோய் தாக்குதல்! - கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை விளக்கம்!!

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தேசிய விருது!!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

 

English Summary: No harm ..! No side effects ..! Use biological insect repellents for plant growth
Published on: 23 March 2021, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now