மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2021 12:24 PM IST
Oil Mill Business: Ways to Make a Profitable Oil Business!

பெருகிவரும் மக்கள்தொகையுடன், சமையல் எண்ணெயின் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு விதைகளிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் வணிகம் ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் வெற்றிகரமாகவும் பிரபலமாகவும் நடைபெற்று வருகிறது. பருத்தி, கடுகு, வேர்க்கடலை மற்றும்  பல்வேறு எண்ணெய் பயிர்களை வளர்ப்பதற்கான தனித்துவமான இயற்கை சூழல் இந்தியாவில் உள்ளது. எனவே, மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன.

எண்ணெய் வணிகத்தைத் தொடங்குவது மிகவும் இலாபகரமான வணிக யோசனைகளில் ஒன்றாகும். இன்று,  இந்தியாவில் ஒரு எண்ணெய் மில் தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

எண்ணெய் மில் வணிகம்

ஒரு எண்ணெய் மில்லில், விதைகள் அரைக்கப்பட்டு & எண்ணெய் எடுக்கப்பட்டு பின்னர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. இருப்பினும், ஒரு எண்ணெய் ஆலையை தொடங்குவதற்கு முன், பல வகையான இயந்திரங்கள் வாங்க வேண்டும் & எள் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எந்த வகை எண்ணெய் ஆலையை தொடங்க விருப்பம் உள்ளது போன்ற பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவில், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் போன்ற பல்வேறு வகையான எண்ணெய்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சிறிய அளவிலான தொழில்

சிறிய அளவிலான எண்ணெய் எடுக்கும் ஆலைத் தொழிலில், ஒவ்வொரு நாளும் 5-10 மெட்ரிக் டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

நடுத்தர அளவிலான தொழில்

நடுத்தர அளவிலான எண்ணெய் எடுக்கும் தொழிலில், ஒவ்வொரு நாளும் 10-50 மெட்ரிக் டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

பெரிய அளவிலான தொழில்

பெரிய அளவிலான எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிலில், ஒவ்வொரு நாளும் 50 மெட்ரிக் டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

ஆயில் மில் தொழில் தொடங்குவதற்கான படிகள்

இந்தியாவில் எண்ணெய் ஆலை வணிகத்தைத் தொடங்க பின்பற்ற வேண்டிய சில படிகள் கீழே உள்ளன:

சந்தையை பகுப்பாய்வு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எண்ணெய்களுக்கான தேவையைப் தெரிந்துகொள்வது அவசியம், ஏனெனில் இது பல்வேறு பிராந்தியங்களில் வருமானம் மற்றும் மக்கள்தொகையைப் பொறுத்தது.

நிதி ஏற்பாடு

எண்ணெய் ஆலை வணிகத்தை சொந்தமாக நிதியுடன் தொடங்க முடியாவிட்டால், தொழிலைத் தொடங்குவதற்காக வங்கிகளிலிருந்தோ அல்லது உள்ளூர் துணிகர மூலதன நிறுவனங்களிலிருந்தோ நிதி பெறலாம்.

எண்ணெய் ஆலை செயலாக்க இயந்திரத்தைப் பெறுதல்

எண்ணெய் ஆலை வணிகத்தில் இயந்திரங்களின் ஒரு முக்கியமான தேவை உள்ளது. உலகில் எண்ணெய் எடுக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. எண்ணெய் பதப்படுத்தும் இயந்திரங்களை வாங்கக்கூடிய மிகவும் நம்பகமான நிறுவனத்தை தேர்வு செய்ய சரியான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

மூலப்பொருளைக் கண்டறிதல்

இந்த வணிகத்திற்கான மூலப்பொருள் கிடைப்பது எப்பொழுதும் கிடைப்பது போல் ஏற்பாடு செய்வது  முக்கியம். எனவே,இந்த வணிகத்திற்கு மூலப்பொருளை தவறாமல் வழங்கக்கூடிய ஒரு விவசாயியை  கண்டுபிடிக்க வேண்டும்.

ஆயில் மில் வணிகத்தின் பதிவு

இந்தியாவில் எண்ணெய் ஆலைத் தொழிலைத் தொடங்க முதலில் பதிவு செய்வது கட்டாயமாகும். வணிகப் பதிவு கட்டாயமாகும். பதிவு முடிந்தவுடன், வணிகத்திற்கு வர்த்தக உரிமம் மற்றும் வணிக PAN அட்டை வழங்கப்படும்.

ஆயில் மில் தொழில் தொடங்க உரிமம் மற்றும் சான்றிதழ்

இந்தியாவில் எண்ணெய் ஆலை வணிகத்தைத் தொடங்கும்போது உரிமம் மற்றும் சான்றிதழைப் பெறுவது அவசியம், இதனால் எண்ணெயை சந்தையில் விற்க முடியும்.

உணவு பொருட்கள் தொடர்பான இரண்டு வகையான உரிமங்கள் உள்ளன, அவை அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன, இது எண்ணெய் மில் வணிகத்தால் பெறப்பட வேண்டும். ஒரு உரிமம் இந்திய தரநிலைகளால் வழங்கப்படுகிறது மற்றும் மற்ற உரிமம் FSSAI ஆல் வழங்கப்படுகிறது. மற்ற வகை உரிமங்கள் அந்த மாநில அரசிடமிருந்து பெறப்பட வேண்டும், அங்கு ஆயில் மில் வணிகம் அமைக்கப்படுகிறது.

மேலும் படிக்க...

பருப்பு வகைகளில் இருப்பு: அதிகமாகும் சமையல் எண்ணெய் விலை

English Summary: Oil Mill Business: Ways to Make a Profitable Oil Business!
Published on: 17 September 2021, 12:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now