Farm Info

Friday, 12 August 2022 04:34 PM , by: Deiva Bindhiya

Paddy and goose are best friends: Integrated Farm Project

நெல் சாகுபடி செய்யும் வயல்களில் வாத்து வளர்ப்பதால் வரும் நன்மைகள், மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், அதன் பயன்கள் பற்றி, இந்த பதிவில் பார்க்கலாம்.

  • களை கட்டுப்பாடு
  • நல்ல கற்றோட்டம்
  • பூச்சிக்கட்டுப்பாடு
  • எச்சத்தின் மூலம் 10:8:35 என்ற அளவில் தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்
  • அதிக தூர் எண்ணிக்கை மற்றும் விளைச்சல்

எப்படி?

  • ஒரு ஏக்கருக்கு ஒரு மாத வயதுள்ள 160 வாத்து குஞ்சுக்களை நட்ட 10ஆம் நாள் நெல் வயலில் விட வேண்டும்.
  • தினமும் 8 மணி நேரம் மேய விட வேண்டும்.
  • புடை கட்டும் பருவம் வரை நெல் வயலில் வாத்துக்களை மேய அனுமதிக்கலாம்.

வருமானம்:

இதர வருமானமாக வாத்துக்கள் மூலம் குறைந்தது ரூபாய் 20,000 ஏக்கருக்கு பெறலாம். நெல்லில் இயற்கை விவசாயத்திற்கு இனிய வரவாக அமையும் இந்த வாத்துக்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பயன்கள்:

  • அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையின் தேவையை சமநிலைபடுத்தப்படுகிறது.
  • மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது.
  • நீடித்த மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி அதிகரிக்கிறது.
  • ஒருங்கிணைந்த வேளாண் சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட் , கொழுப்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது.
  • விவசாயிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பானது அதிகரிக்கிறது.

மானியம்:

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், இதற்கான மானியத்தை வழங்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

சேலம்: காய்கறிகள் விற்கும் ஆறு நடமாடும் வாகனங்கள் விரைவில் களமிறங்கும்

தமிழகம்: இன்று முதல் தனியார் பால் விலை அதிரடியாக உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)