மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 July, 2023 4:50 PM IST
pm kisan next 14th installment date: Check the beneficiary status

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) என்பது மத்திய அரசின் திட்டமாகும், இது நாட்டில் உள்ள அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கும் அவர்களின் நிதித் தேவைகளைப் பெருக்க வருமான ஆதரவை வழங்குகிறது.

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு ரூ. 2000 பதிவு செய்து, திட்டத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்த தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தி வருகிறது.

பிப்ரவரி 26, 2023 அன்று அரசு 13வது தவணையை வெளியிட்டது. PM கிசான் பயனாளிகள், இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் மூன்று தவணைகளில் தொகையைப் பெறுவார்கள். பொதுவாக, முதல் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்படும்.

PM கிசான் தவணை தொகை:

இந்தத் திட்டம் ஆண்டு வருமான ஆதரவாக ரூ. 6000 வழங்குகிறது. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், பணம் மூன்று சமமாக தலா ரூ.2000மாக வழங்கப்படுகிறது. பயனாளியின் ஆதார் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (DBT) செயல்படுத்தப்பட்ட அல்லது ஆதார் மற்றும் NPCI-யுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் இல்லாத விவசாயிகள், உடனடியாக தங்கள் உள்ளூர் தபால் நிலையத்தை அணுகவும்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்..மத்திய அரசின் புதிய திட்டம்!

PM கிசான் 14வது தவணை (PM Kisan 14th Installment):

PM கிசானின் 14வது தவணை தேதி விரைவில் அரசால் அறிவிக்கப்படும். அதன்படி, கடைசி தவணை பிப்ரவரி 26, 2023 அன்று வெளியிடப்பட்டதால், அடுத்த தவணை ஜூலை 30, 2023-க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PM கிசான் eKYC:

PM Kisan வலைத்தளத்தின்படி, “PMKISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.

CSC மையம் என்றால் இ-சேவை மையம் ஆகும்.

PM கிசான் பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்:

1: அதிகாரப்பூர்வ PM KISAN போர்ட்டலுக்குச் செல்லவும்
2: 'விவசாயிகளின் மூலை அதாவது Farmers corner' என்பதன் கீழ் 'பயனாளிகள் பட்டியல் அதாவது Beneficiary List' என்பதைக் கிளிக் செய்யவும்

3: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி, கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்
4: அதன் பிறகு'Get Report' என்பதை கிளிக் செய்யவும்

ஆன்லைனில் eKYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது:

1: PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
2: பக்கத்தின் வலது பக்கத்தில் கிடைக்கும் eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்
3: உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை அதாவது 'search' என்பதை கிளிக் செய்யவும்
4: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
5: 'Get OTP' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP ஐ உள்ளிடவும்.

மேலும் படிக்க:

அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியம்!

வேளாண் இயந்திரங்கள்: 50 சதவீத மானிய விலையில் வாடகைக்கு பெறலாம்

English Summary: pm kisan next 14th installment date: Check the beneficiary status
Published on: 29 March 2023, 11:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now