நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 June, 2022 7:52 AM IST

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் தவணையை, வீட்டுக்கே நேரடியாக அனுப்புவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் 2000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி நேரடியாக வீட்டுக்கே 2000 ரூபாயை வழங்கும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

​பிரதமர் கிசான் 

விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஆதரவு வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது.

கடந்த மே 31ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் கீழ் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக பணம்

பிரதமர் கிசான் திட்டத்தின் சிறப்பு அம்சமே விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. எனவே, அவர்கள் பணத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையத் தேவையில்லை. இடைத்தரகர்களின் அட்டூழியத்தைத் தடுக்கவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்கே வரும்

ஆனால், வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் சவுகரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வீட்டுக்கே நேரடியாக 2000 ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

​ஆப்கா பேங்க், ஆப்கே துவார்

இதற்காக ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ (Apka Bank, Apke Dwar) என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் இந்த பணத்தை வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள்.

மேலும் படிக்க...

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

விவசாயிகளுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!

English Summary: PM-kisan Rs.2000 installment-will come to l farmers house!
Published on: 06 June 2022, 05:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now