மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 January, 2022 6:56 PM IST
PM Kisan scheme: Opportunity to provide 8000 instead of 6000 per year!

விவசாயிகளுக்கு நற்செய்தி! அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, வரவிருக்கும் பட்ஜெட்டில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை ஆண்டுக்கு ரூ.6000-லிருந்து ரூ.8000 ஆக, ஒன்றிய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 3 விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது குறித்தும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்த தகவல்களும் இதில் இடம் பெறும். 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் பல கொள்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடான 65,000 கோடி ரூபாயில் இருந்து அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த குழுவை அமைப்பது குறித்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம். விவசாயச் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, MSPக்கான ஒரு குழுவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் அறிவிப்பு அதிக நம்பகத்தன்மையை கொடுக்கும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற அறிவிப்புகள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை இலக்காகக் கொண்டவை அல்ல என்பதால் தேர்தல் நடத்தை விதிகளை மீறாது.

2022-23 ஆண்டுக்கான கடன் இலக்கு (Credit Target for FY2022-23)

பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கை சுமார் 18 லட்சம் கோடி ரூபாயாக மோடி அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு கடன் இலக்கு ரூ. 16.5 லட்சம் கோடி.

வங்கித் துறைக்கான பயிர்க் கடன் இலக்குகளை உள்ளடக்கிய வருடாந்திர விவசாயக் கடனை மையம் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட விவசாயக் கடன் ஓட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7% என்ற விகிதத்தில் 3 லட்சம் ரூபாய் வரை குறுகிய காலக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு 2% வட்டி மானியத்தை வழங்குகிறது. உரிய தேதிக்குள் கடனை விரைவாக திருப்பிச் செலுத்த விவசாயிகளுக்கு 3% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இது நடைமுறை வட்டி விகிதம் 4% ஆகும்.

மோடி அரசு வட்டி மானியத்தை அதிகரிக்கலாம் மற்றும் கடன்களை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிசெய்ய கூடுதல் ஊக்கத்தொகைகளையும் அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது? தேவையானவை

பட்ஜெட் 2022: இயற்கை விவசாயம் செய்ய உதவித் தொகை எவ்வளவு?

English Summary: PM Kisan scheme: Opportunity to provide 8000 instead of 6000 per year!
Published on: 19 January 2022, 12:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now