மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2021 11:34 AM IST
Credit : DNA India

PM- Kisan திட்டத்தின் கீழ் 43 நாட்களில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி கிடைத்துள்ளது.

பிரதமரின் கிசான் (PM- kisan Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.
2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தகுதி (Farmers qualify)

அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிஎம் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

யாருக்கு தகுதி இல்லை  (Who does not deserve it)

அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 43 நாட்களில் மட்டும் சுமார் 45 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியுதவி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

9 கோடி விவசாயிகள் (9 Crore Farmers)

கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதியில் மட்டும் மொத்தம் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 9,45,18,692 ஆக உயர்ந்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது மொத்தம் 14.5 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக 25 மாதங்களில் 11.53 விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். 2.97 கோடி விவசாயிகளுக்கு உதவி சென்று சேரவில்லை.

மேலும் படிக்க....

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!

English Summary: PM-Kisan Scheme: Rs 2,000 for 45 lakh farmers
Published on: 09 February 2021, 11:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now