1. செய்திகள்

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் : நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Narendra sing thomar
Credit : The Tribune India

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் விவகாரத்தில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேளு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதித்தும் பாஜக அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

முட்டுக்கட்டை நீங்கும்

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் செய்தியாளர்களிடம் பேசி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டையை விரைவில் உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அரசியல் செய்யும் காங்கிரஸ்

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதற்கு காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு ஏன் எதுவும் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இத்தகைய சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த கட்சி இல்லை என மறுத்து கூறி வருகிறது. இந்த விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்து காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய சக்கா ஜாம் போராட்டம்!

புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்: ஆய்வில் தகவல்

English Summary: I hope we will be able to break the deadlock very soon in Farmers' protest, Narendra Singh Tomar said. Published on: 08 February 2021, 09:42 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.