Farm Info

Saturday, 01 April 2023 03:32 PM , by: Deiva Bindhiya

1.PM கிசான் 14வது தவணை எப்போதும் வரும் குறித்த அப்டேட்!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு ரூ. 2000, பதிவு செய்து, திட்டத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்த தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தி வருகிறது. பிப்ரவரி 26, 2023 அன்று அரசு 13வது தவணையை வெளியிட்டது. PM கிசானின் 14வது தவணை தேதி விரைவில் அரசால் அறிவிக்கப்படும். மேலும், ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2023-க்கு இடையில், இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMKISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும், எனவே, விவசாயிகள் e-kyc பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2.கச்சா எண்ணெய் சர்வதேச விலை சரிவு: LPG விலை என்ன?

சென்னையில் எல்பிஜி விலை, கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையை பெரிதும் சார்ந்துள்ளது. இவை அதிகமாகும் போது, சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் உயரும். ஏழைப் பிரிவினருக்கு, அரசு இந்த விலைகளுக்கு மானியம் அளித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான மக்களுக்கு சமையல் எரிவாயு இப்போது எளிதாகக் கிடைக்கிறது. சென்னையில் இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ. 1,118.50 காசுக்கு விற்பனை ஆகிறது.

3.தோட்டக்கலை துறை சார்பாக சிப்பம் கட்டும் அறை அமைக்க 50% மானியம்!

அறுவடை செய்த பழங்கள் காய்கறிகள் மற்றும் இதர தோட்டக்கலை பொருட்களை தரம் பிரித்து சுத்தம் செய்து சந்தைப்படுத்திட சிப்பம் கட்டும் அறை அவசியம். சிப்பம் கட்டும் அறை விளைப்பொருட்களை வீணாவதை கணிசமான அளவு குறைப்பதற்கு விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட வழி வகுக்கின்றது. தோட்டக்கலை விவசாயிகள் சிப்பம் கட்டும் அறை அமைக்க தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கம் எனும் திட்டத்தில் 50 சதவித மானியத்தில் 600 சதுர அடியுள்ள ஒரு சிப்பம் கட்டும் அறைக்கு ரூ.2,00,000 வரை பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யவும்.

www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php

PM Kisan update| Crude Oil Price Fall: What is LPG Price| 50% Subsidy for Setting up of Shelling Room

4.தேவையான சான்று விதைகளை விவசாயிகள் பெறலாம்- குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களிடத்தில் கலந்துரையாடினார். வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 752.6 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு, அவர் தெரிவித்துள்ளார்.

5.ஏலகிரியில் உள்ள பழங்குடியின விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை நாடுகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள், 20 கி.மீ., தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில், அரசின் மானியம், விதை, உரம் மற்றும் இதர வேளாண் பொருட்களை சேகரிக்க வேண்டியதால், அப்பகுதியில் வேளாண்மை அலுவலகம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகிய மலைப்பிரதேசமான ஏலகிரியில் விவசாயம் முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். இந்த இடம் வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மே வரை) மாம்பழம், கொய்யா, பலா, வாழைப்பழம் போன்ற பல்வேறு வகையான பயிர்களையும், ஆண்டு முழுவதும் தக்காளி, பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் விளைவிப்பதற்காக அறியப்படுகிறது. எனவே, விவசாயிகளின் பிரச்சனைக்கு விரைவில் அரசு தீர்வு காணும் என நம்பப்படுகிறது.

6. வானிலை தகவல்

இன்று முதல் வருகிற ஏப்ரல் 4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் படிக்க:

உடலில் நீர்சத்து அதிகரிக்க, Try This!

ஆண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக திட்டம்: இன்றே தொடங்குங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)