மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2020 11:42 AM IST

கோவை மாவட்டத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு, இரண்டாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு பருவத்திலும், 1,500 ஹெக்டேர் பரப்பில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பருவமழை பெய்து, பாசன நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அமெரிக்கன் ராணுவ கட்டுப்படுத்த, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு இரண்டாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அந்தந்த வேளாண் அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு, உழவு மேற்கொள்ளும் போது ஹெக்டேருக்கு, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு, விதைக்கும் முன், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, பத்து கிராம் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா' அல்லது, பத்து கிராம் 'தயோமீதாக்சம் 30 சதவீதம் எப்.எஸ். சேர்த்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

மக்காச்சோளம் சாகுபடி நிலத்தில், ஹெக்டேருக்கு ஒரு சூரிய விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வைத்து படைப்புழுக்களை அழிக்கலாம். வரப்பு பயிராக எள், சூரியகாந்தி, சோளம், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!

English Summary: Rs 2,000 grant to control American worm - Farmers call for registration!
Published on: 17 September 2020, 11:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now